உலகெலாம் ” – சன்மார்க்க விளக்கம்
தேசத்தின் விரிவு :
வள்ளலார் , ” உலகெலாம் ” என்ற ஒரு வார்த்தைக்கு விளக்கமாக ” மெய்ம்மொழிப் பொருள் விளக்கம் ” எழுதி , அதில் தத்துவ உலகங்களை 80 – 90 பக்கங்களுக்கு அண்டங்களின் விரிவை எடுத்துக் கூறுகின்றார்
தேகத்தின் விரிவு :
பிண்ட அனுபவ இலக்கணமாக உரை நடைப் பகுதியில் விவரிக்கின்றார்.
இவைகள் எப்படி சாத்தியம் ஆயிற்று ??
* ஆன்ம நிலையில் மாயா மலம் காரியப் படாது ஆகையால், ஸ்தூலக் கண்களுக்கு எல்லாம் பட்டப் பகல் போல் வெளிச்சம் ஆகிவிடுகின்றது
அப்போது இது சாத்தியம் ஆகின்றது
** ஜீவகாருண்யத்தின் பலனாக நாம் ஆன்ம நிலையை அடைந்து விட்டால் , நம் அறிவு விசாலமாகி, அண்ட அண்டங்களைக் கடந்து விளங்கும். கண்ணில் மறைப்பாகிய மாயா மலம் நீங்கி விட்ட படியால் எல்லாம் பட்டப் பகல் போல் விளங்கியும், நம் அறிவு அண்டங்களைக் கடந்தும் விளங்கும்.
மேற்கூறியவைகள் யாவுமே ஆன்ம நிலையில் மட்டுமே சாத்தியம் – ஆன்ம அனுபவங்கள்.
அப்போது இது சாத்தியம் ஆகின்றது
இதற்கானப் பயிற்சியும் விடையும் :
கண்ணில் உள்ள மாயா மலமாகிய இருளை பரவிந்து ஒளியானது உண்டு விட்டால் , உலக விரிவையும் , சரீர அமைப்பின் உள் விரிவையும் , தத்துவங்களையும், பஞ்ச பூத சூக்கும அதி தேவதைகளையும் , ஆத்மத்தையும் , பரத்தையும் ” பார்க்க கண்கள் பூரண சக்தியைப் பெற்றுவிடும் ”
இந்த பயிற்சியில் வள்ளலார் வெற்றி பெற்றிருந்ததால், அவருக்கு அண்டத்தின் விரிவும் மற்றும் தேகத்தின் விரிவும் செயல்பாடும் கண்களுக்கு தெரிந்தது என்பது
உறுதி
வெங்கடேஷ்