நம் இந்தியக் கலாச்சாரமும் – அதன் ஞானத் தொடர்பும் – பாகம் 2
திருமணத்தில் :
1 தாலி கட்டிவிட்டு மணமகன் மணமகள் “கை” யைப் பிடிக்கின்றான்.
கை = ஆன்மா / ஆன்ம அனுபவம் – சுழிமுனை அனுபவம் பெறுதல்
அதாவது – ஒரு ஜீவனாகிய பெண் , தான் புருஷனாகிய ஆன்மாவை அடைகிறாள் என்பதை சூசகமாக விளக்குகின்றது இந்தப் படலம்
ஆண்டாள் : ” கை “ப் பிடிக்க கனாக் கண்டேன் தோழி என்ற பாடலில் – தான் ஆன்மா/சுழிமுனை அனுபவம் அடைந்ததை உறுதிப் படுத்துகிறர்ா.
2. மணமகள் நெற்றியில் ” பொட்டு” வைக்கின்றார்.
பொட்டு = ஆன்மா /புருஷன்
புருஷன் என்பது 7 வித்யா தத்துவங்களில் ஒன்று என்பதைக் கவனிக்கவும்.
3. உச்சியில் பொட்டு வைத்தால் – அங்கு சிவம் இருக்கிறது என்பதை சூசகமாக தெரியப்படுத்துகிறார்கள்
4. மரணத்தில் :
புருஷன் இறந்து விட்டால் , பெண்ணிற்கு, பொட்டு அழித்து விடுகிறார்கள்
அருத்தம் – நெற்றியில் இருக்கும் புருஷனாகிய ஆன்மா இல்லை – அதனால் பொட்டு இல்லை
என்னே அறிவு என்னே அறிவு???
5. அதனால் அவளை “முண்டை ” என்றும் அழைக்கின்றார்கள்
அருத்தம் : தலை இல்லாத உடம்பிற்கு பெயர் முண்டம்
அதாவது – இவள் புருஷனாகிய ஆன்மா இல்லாத வெறும் உடம்பாகிய முண்டம் என்று கூறுகின்றார்கள்
வெங்கடேஷ்