திருமந்திரத்தில் – சாகாக்கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு
1 மூலத்துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத்துவாரத்தை நோக்கி முற்
காலுற்று காலனைக் காய்ந்தங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாய் இருந்ததே
மூலத்துவாரம் – சுழிமுனை வாசல் (அ ) சுழிமுனை வாசலில் இருக்கும் துவாரம்
மேலைத்துவாரம் – சுழிமுனை நாடியின் நுனியில் இருக்கும் துவாரம்
இப்பாடலின் திரண்ட கருத்து யாதெனில் :
திருவடி கொண்டு சுழிமுனை வாசலைத் திறந்து அபானனை அதனுள் செலுத்தி , மேல் கொண்டு வந்து , சுழிமுனைக்கு கொண்டு வருவது அங்கி யோகம் என்று பெயர் – அவர் உலக பிரக்ஞையற்று இருப்பர்.
2. மூலத் துவாரத்தை மொக்கர மிட்டிரு
மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
காலத்தை வெல்லும் கருத்திது தானே
மூலத் துவாரம் – சுழிமுனை வாசல் (அ ) சுழிமுனை வாசலில் இருக்கும் துவாரம்
மேலைத் துவாரம் – சுழிமுனை நாடியின் நுனியில் இருக்கும் துவாரம்
இப்பாடலின் திரண்ட கருத்து யாதெனில் :
சுழிமுனைத் துவாரத்திலேயே மனமும் கண்களும் லயித்து அசைவற்று நோக்கியிருந்தால் – யமனை – காலத்தை வெல்லலாம்
வெங்கடேஷ்
2015 இல் இருந்து தங்கள் தளத்தைப் பார்த்து வருகிறேன் ,
வரிக்குவரி சொல்லுக்குச் சொல்
எனது அனுபவங்களாக உள்ளன.
இது எப்படி சாத்தியமாகும்
ஆச்சரியமாக இருக்கிறது.
LikeLike
becoz experiences are universal , same to one and all madame – beaucoup merci
LikeLike