அருட்பெருஞ்சோதி அகவல் விளக்கம்
உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செபியசிவமே ( 970 )
உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக = எல்லா ஜீவர்களையும் ஜீவர்களாகவும், வெவ்வேறு உடல் மற்றும் கருவி கரணங்கள் கூடியவர்களாக பிரித்து வேற்றுமைப்படுத்தி நோக்காமல் , ஆன்மா என்னும் பொதுமை மற்றும் ஒருமை நோக்கத்தோடு பார்க்கவும்
செயிரெலாம் விடுக = மற்ற எல்லா எதிர்மறையானவைகளை விட்டுவிடுக
சாதாரண ஜீவர்கள் நிலை – இருமை நிலை – இரவு /பகல் , வெற்றி /தோல்வி என்னும் இரட்டைகளாகும்
அசாதாரண ஆன்ம நிலை – இரட்டைகள் இணைந்து ஒருமை என்னும் ஆன்ம நிலை – அனுபவத்திற்கு வருவது அவ்வளவு எளிதல்ல
திரண்ட கருத்து :
எல்லா ஜீவர்களையும் ” ஆன்மா என்னும் ஒருமை ” பார்வையோடு பார்க்க வேண்டும் என APJ ஆண்டவர் வள்ளல் பெருமானிடம் கூறினார்
வெங்கடேஷ்