மெய்யருள் வியப்பு விளக்கம் – 23

மெய்யருள் வியப்பு விளக்கம் – 23 சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலையே தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலையே ஓதல் உணர்தல் உவத்தல் எனக்கு நின்பொற்பாதமே உலக விடயக் காட்டில் செல்லாதெனது போதமே ( பாடல் 60 ) சாதல் பிறத்தல் என்னும் அவத்தைத் தவிர்த்துக் காலையே – வள்ளல் பெருமானுக்கு பிறப்பிறப்பு என்னும் அவத்தை நீக்கப்பட்டுவிட்டதாம் தனித்துன் அருளின் அமுதம் புகட்டிக் கொடுத்தாய் மேலையே – ஆன்மாவின் அருளால் அவருக்கு அமுதம்…

ஆன்ம தரிசனம் – 3

ஆன்ம தரிசனம் – 3 1 பூதகளற்று பொறியற்று சாரைம்புலங்களற்று பேதங்குணமற்று பேராசை தானற்று பின்முன்னற்று காதங்கரணங்களும் அற்ற ஆனந்தக் காட்சியிலே ஏதங்களைந்திருப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே 2. இல்லந்துறந்து பசிவந்த போதங்கி ரந்து நின்று பல்லும் கரையற்று வெள்வாயுமாய் ஒன்றில் பற்றுமற்று சொல்லும் பொருளுமிழந்து சுகானந்தத் தூக்கத்திலே அல்லும் பகலும் இருப்பதென்றோ கயிலாயத்தனே 3. சிந்தனையற்று பிரியமுந்தானற்று செய்கையற்று நினைந்ததுமற்று நினையாமையுமற்று நிர்ச்சிந்தனாய்த் தன்னந்தனியே இருந்தானந்த நித்திரை தங்குகின்ற அனந்தலில் என்றிருப்பேன் அத்தனே கயிலாயத்தனே மேற்கூறிய…

திருவடிப் புகழ்ச்சியும் பெருமையும் – 2

திருவடிப் புகழ்ச்சியும் பெருமையும் 2 பட்டினத்தார் பாடல் – கச்சி ஏகம்ப மாலை 1 ஊரும் சதமல்ல உற்றாரும் சதமல்ல உற்றுப்பெற்ற பேரும் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளும் சீரும் சதமல்ல செல்வமும் சதமல்ல தேசத்திலே யாரும் சதமல்ல நிந்தாள் சதம் கச்சி யேகம்பனே 2 அடியார்க்கு எளியவராம் அம்பலவாணரடி பணிந்தால் மடியாமல் செல்வவரம் பெறலாம் – வையம் ஏழளந்த நெடியோனும் வேதனும் காணாத நித்த நிமலனருள் குடிகாணும் நான்களவர் காணும் எங்கள் குலதெய்வமே இந்த இரு…