மெய்யருள் வியப்பு – 24
கடையேன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லையே
கனியதாக்கித் தூக்கிக் கொண்டாய்த் துரியத் தெல்லையே
உடையாய் துரியத் தலத்தின் மேல் நின்றோங்குன் தலத்திலே
உன்பால் இருக்க வைத்தாய் என்னை உவந்து வலத்திலே ( பாடல் 76 )
கடையேன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லையே
கனியதாக்கித் தூக்கிக் கொண்டாய்த் துரியத் தெல்லையே என்பது வள்ளல் பெருமான் தன் சாதனையால் ( கண்கள் கொண்டு செய்யும் பயிற்சி ) கல் போன்ற மனத்தை கனிவித்து , ஆன்ம நிலைக்கு உயர்த்தினாய்
உடையாய் துரியத் தலத்தின் மேல் நின்றோங்குன் தலத்திலே
உன்பால் இருக்க வைத்தாய் என்னை உவந்து வலத்திலே – ஆன்மாவுக்கு உள்ளும் மேலும் இருக்கும் வெளிகளில் என்னை அழைத்துச் சென்று என்னை உன்பால் இருக்க வைத்தாய்
திரண்ட கருத்து :
வள்ளல் பெருமான் தன் ஆன்மா தன்னை கனிய வைத்து ஆன்மா நிலைக்கு உயர்த்தியது என்று தன் அனுபவத்தை இங்கு விளக்குகின்றார்
வெங்கடேஷ்