மெய்யருள் வியப்பு – 26
கருணா நிதி தன்னைக் காணக் கண்கள் துடிக்குதே
காண்போம் என்று நினைக்குன் தோறும் உடம்பு பொடிக்குதே
அருள் நாடகஞ்ச் செய் பதங்கள் பாடி ஆட விரைவதே
ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவதே ( பாடல் 23 )
கருணா நிதி தன்னைக் காணக் கண்கள் துடிக்குதே = சுத்த சிவமாகிய கருணாநிதியைக் காணக் கண்கள் ஆசைப்படுகின்றதாம்
காண்போம் என்று நினைக்குன் தோறும் உடம்பு பொடிக்குதே = சுத்த சிவமாகிய கருணாநிதியைக் காண்போம் என்று நினைக்கும்போது உடல் பொடிக்குதாம்
ஆடும் பொதுவை நினைக்க நினைக்க நெஞ்சம் கரைவதே – சுத்த சிவத்தின் அசைவு நடக்கும் பொதுவாகிய வெளியை நினைக்க நினைக்க வள்ளல் பெருமானின் ஜீவனுக்கு நெகிழ்ச்சி உண்டாகின்றதாம்
திரண்ட கருத்து :
சுத்த சிவத்தின் கிட்டியதாலும் அதனைப் பற்றி சிந்தித்தாலும் , அதன் சத்தியினால் ஜீவனுக்கு நெகிழ்ச்சி உண்டாகும் – அதனால் மனம் கரையும்
வெங்கடேஷ்