சிவயோகியர் தம் நிலையும் இயல்பும் – 4

சிவயோகியர்   நிலையும் இயல்பும் – 4 சிவவாக்கியர் பாடல் உறக்கிலென் விழிக்கிலென் உணர்வு சென்று ஒடுங்கிலென் சிறந்த ஐம்புலங்களும் திசைதிசைகள் ஒன்றிலென் புறமும் உள்ளும் எங்ஙனம் பொருந்திருந்த தேகமாய் நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பது ஏதுமில்லையே திரண்ட கருத்து : ஞானிகள் எந்த நிலையில் இருந்தாலும் – தூங்கிகொண்டிருந்தாலென்ன, விழித்திருந்தாலென்ன அவர்தம் உணர்வு சுழிமுனையில் ஒடுங்கி இருந்தாலும் தான் என்ன , அவர்கள் நினைப்பது ஒன்றுமில்லையே வெங்கடேஷ்

சிவயோகியர் நிலையும் இயல்பும் – 3

சிவயோகியர் நிலையும் இயல்பும் – 3 சிவவாக்கியர் பாடல் புண்டரீக மத்தியில் உதித்தெழுந்த ஜோதியை மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை அண்டரண்டம் ஊடறுத்து அறிந்துணர வல்லீரேல் கண்ட கோவில் தெய்வம் என்று கை எடுப்பதில்லையே திரண்ட கருத்து : 1008 இதழ்க் கமலம் மீதும் சுடர் விட்டு எரியும் ஆன்ம ஜோதியை கண்டவர் புறத்திலே கோவிலைக் கண்டால் அவர் கை தூக்கி வணங்க மாட்டார் என்று ஞானியர் தம் இயல்பை பறை சாற்றுகின்றார் சிவவாக்கியர் வெங்கடேஷ்

சிவயோகியர் நிலையும் இயல்பும் – 2

சிவயோகியர் நிலையும் இயல்பும் – 2 சிவவாக்கியர் பாடல் மனத்தகத்து அழுக்கறாத மவுனஞான யோகிகாள் வனத்தகத்து இருப்பினும் மனத்தகத்து அழுக்கறார் மனத்தகத்து அழுக்கறுத்த மவுனஞான யோகிகாள் பிணத்தடத்து இருப்பினும் பிறப்பறுத்து இருப்பரே திரண்ட கருத்து : மனத்துக்கண் இருந்த அழுக்குகளான மாயை – கன்ம மலங்கள் நீங்கப் பெறாதவர்கள் வனத்தில் இருந்தாலும் தம் மலங்கள் நீங்கப் பெறார்கள் அதே சமயம் மனத்துக் கண் உள்ள மலங்களை ஒழித்தவர்கள் எந்த நிலையிலும் இருந்தாலும் – பிணத்தின் மீதே இருந்தாலும்…

வாழ்க்கை – நிதர்சன உண்மை – 2

வாழ்க்கை – நிதர்சன உண்மை – 2 சிவவாக்கியர் பாடல் வேணும் வேணும் என்று நீர் வீணே உழன்று தேடுவீர் வேணும் என்று தேடினும் உள்ளதல்லது இல்லையே வேணும் என்று தேடுகின்ற வேட்கையை துறந்தபின் வேணும் என்ற அப்பொருள் விரைந்து காணல் ஆகுமே திரண்ட கருத்து : உலக வாழ்க்கையில் நாம் விரும்பிப் பின்செல்கின்ற பொருள்கள் நமக்கு கிடைப்பதில்லை – நமக்கு துன்பத்தையே தருகின்றன நாம் அனுபவ பூர்வமாக கண்ட உண்மை அதே சமயம் அந்த பொருள்களின்…