ஆறாம் திருமுறை – அனுபவ மாலை
ஆறாம் திருமுறை அனுபவ மாலை கற்பூரம் மணக்கின்றது என்னுடம்பு முழுதும் கணவர் திருமேனியிலே கலந்த மணம் அதுதான் இற்பூத மணம் போலே மறைவதன்று கண்டாய் இயற்கை மணம் துரிய நிறை இறைவடிவத்துளதே பொற்பூவும் நறுமணமும் கண்டறியார் உலகவர் புண்ணியனார் திருவடிவில் நண்ணியவாறு அதுவே நற்பூதி அணிந்ததிரு வடிவுமுற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே திரண்ட கருத்து : ஆன்மா வள்ளல் பெருமானது உடலில் கலந்துவிட்டபடியால் , அவரது மேனியில் கற்பூர மணம்…