அனுபவமும் உணர்தலும் – பாகம் 1
நம் சன்மார்க்கத்திலும் சரி எந்த ஒரு சமயத்திலும் சரி இந்த கேள்வி வரும்
இப்போது நிறைய பேர்
” நானே பரப்பிரம்மம் – நான் அவன் தான் ”
” நான் உலகத்தை நடத்துபவன் ”
என்றெல்லாம் எழுதி வருகின்றார்கள்
இது வேதாந்த வாக்கியங்களை இறுமாப்புடன் கூறுவதற்குச் சமம்
வேத ரிஷிகள் அனுபவித்த பிறகு அவ்வாக்கியங்களை கூறினார்கள் – அவர்களுக்கு பொருந்தும்
கேட்டால் நான் உணர்ந்து இருக்கின்றேன் என்கிறார்கள் – அதனால் எழுதி வருகிறேன் என்கிறார்கள்.
அது எப்படி மூன்று மலம் உடைய ஒரு ஜீவன் – நிர்மலமான சிவத்திற்கு நிகர் ஆக முடியும் ??
மலம் நீங்கி சுத்தம் ஆனால் சிவத்திற்கு நிகர் ஆக முடியும் – அப்படி எதுவும் செய்யாமல் நான் பிரம்மம் என்று கூறுவது நகைப்பிற்குரியது
இவர்கள் எல்லோரும் வள்ளலார் பதிப்பித்த ” ஒழிவில் ஒடுக்கம் ” என்னும் ஞான நூலை பல முறை படிக்க வேண்டும் – படித்தால் தாங்கள் எந்த நிலையில் இருக்கின்றோம் என்று தெரிந்து கொள்வார்கள்
சன்மார்க்கிகள் அதி புத்திசாலிகள் – அதி மேதாவிகள் – ஆறாம் திருமுறை தவிர வேறு எதுவும் படிக்க மாட்டார்கள்
முதல் 5 திரு முறைகள் சமயம் சார்ந்தது – திருமந்த்ரம் – திருவாசகம் சமயம் சார்ந்தது – அதை ஒதுக்கி விடுவார்கள்
இவர்கள் – கிணற்றுத் தவளைகள் – குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள்
ஒருவர் ஒரு படி மேலே போய் – வள்ளலார் Space இணையதளத்தில்
“எனக்கும் அவனுக்கும் ஒரு பேதமும் இல்லையே” என்று உளறல் வேறு
உணர்தலால் ஒரு பயனும் இன்று – நான் உணர்ந்து விட்டேன் என்று கூறிக்கொண்டிருப்பதனாலும்
ஒரு பயனும் இன்று
நாம் எல்லோரும் சாதனம் பயின்று – கொஞ்சம் கொஞ்சமாக அனுபவத்திற்கு வர வேண்டும் – பின் அந்த அனுபவம் முதிர வேண்டும் – நாம் நல்ல நிலைக்கு வருவோம் அதன் பயனாக
அனுபவம் தான் வேண்டும் – உணர்தல் அல்ல என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்
வெங்கடேஷ்