ஆன்ம லாபம்
நாம் எல்லவரும் ஆன்மாவின் துணை கொண்டு நிறைய லாபம் அடைய வேண்டி இருக்கின்றது.
முதலில் ஆன்மா விழிப்படைய தகுந்த சாதனம் பழக வேண்டும் – அதன் பலனாக அது வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும்
ஆன்மாவின் பலம் அதிகம் அதிகமாக – மனதின் பலம் குறையும் – குன்றிப் போகும்
அப்போது ஆன்மா சாதகனுக்கு பல உதவிகள் புரியும் – நம் கரும வினைகளிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கும்
ஏன் எனில் ஆன்மாவிற்கு இயற்கையாகவே இரு மலம் – மாயா – கன்ம மலம் கிடையாது
அதனால் நாம் மாயா மற்றும் கன்ம மலத்திலிருந்து விடுதலை வேண்டும் எனில் அதற்கு ஆன்மாவின் தயவு மிகவும் அவசியம்
” நாம் தக்க சாதனம் மூலம் தக்க தகுதி அடைந்து” ஆன்மாவின் சகாயம் வேண்டினால் , அது நமக்கு இரு மலத்திலிருந்து விடுதலை கொடுக்கும்
இது நாம் அடையும் ஆன்மாவினால் லாபம் ஆகும்
வெங்க்டேஷ்