அருள் செயல்பாடு

அருள் செயல்பாடு

அகவல் வரிகள்
அருளன்றி அணுவும் அசைந்திடாது அதனால்
அருள் நலம் பெற முயல்க என்ற சிவமே

உலக நடப்புகள் – நிகழ்வுகள் – நம் வாழ்வின் நிகழ்வுகள் – நமக்கு பிடிக்குமோ  – பிடிக்காதோ எல்லாம் அருளின் ஆணைப்படி – இச்சைப்படி  நடக்கின்றன என்பது உண்மை

அருள் இச்சைப்படி தான் ஒரு நாட்டில் போரும் , ஒரு நாட்டில் உணவுப் பஞ்சம் – இனப் போர் – எல்லாம் நடகின்றது

ஆப்பிரிக்கா சோமாலியாவில் தினமும் ஆயிரக் கணக்கான பேர் (  உணவுப் பஞ்சம்  )  மடிகின்றார்கள் – அதுவும் அருள் இச்சைப்படி தான் நடக்கின்றது   – நம்மால் ஒன்றும் செய்ய முடியாது – ஆண்டவரிடம் காப்பாற்று என்று  விண்ணப்பிக்க முடியுமே அல்லாது வேறு  ஒன்றும் செய்ய முடியாது

எல்லாம் சிவ மயம் என்று வாழ வேண்டும் – நம்மால் எது முடியுமோ அதைச் செய்யலாம் – அவ்வளவு தான் – மற்றதெல்லாம் அவன் அருள் கையில்

அருள் தான் எல்லாவற்றையும் நடத்துகின்றது – ஆக உலகத்தில் அருளாட்சி தான் நடந்தேறி வருகிறது

ஒரு சாதகன் – அவனுடைய கர்மா – பக்குவம் – தகுதி எல்லாவற்றையும் ஆய்ந்து அவனுக்கு என்ன நிலைக்கு கூட்டிச் செல்ல வேண்டுமோ அதற்கு   கூட்டிச் செல்லும்

நமக்கு என்ன தகுதியோ  அது நமக்கு  கொடுப்பது அருள் தான்

நமக்கு  பெரிய பெரிய சன்மார்க்க அனுபவங்கள் சித்தி – கைவல்யம் ஆக வேண்டுமெனில் அதற்கு அருள் தான் நம்மை அழைத்துச் செல்ல வேண்டும்

அருள் தான் நமக்கு வேகாக்கால் அனுபவம் சித்திக்க வைத்து திருச்சிற்றம்பலப் பிரவேசம் நடத்த வேண்டும் – முத்தேக சித்தி – மரணமிலாப் பெருவாழ்வு அளிக்க வேண்டும்

மொத்தத்தில் அருள் தான் சன்மார்க்கத்துக்கு அடிப்படை

வெங்கடேஷ்

2 thoughts on “அருள் செயல்பாடு

  1. இந்த உலகில் இந்த பதிவுகள் படிப்பதற்கு கூட அருள் இருக்கும் ஆன்மா உள்ள விழிகள் படிக்கும் அதில் சில விழிப்புணர்வு பெறும் நன்றி அண்ணா

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s