மெய்யருள் வியப்பு – 30

மெய்யருள் வியப்பு – 30

1 ஏறா நிலையில் விரைந்து விரைந்திங்கு என்னை யேற்றியே
இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே
மாறாக் கருணை என்மேல் வைக்க வந்ததென்னையோ
மதியிலேன் நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னையோ ( பாடல் 18 )

ஏறா நிலையில் விரைந்து விரைந்திங்கு என்னை யேற்றியேசுழிமுனை நாடியில் உள்ளேயும் மேலேயும் வேகமாக தன் உணர்வு பாய்ந்த அனுபவம் பற்றிக் கூறுகின்றார்

இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியேதூக்கம் மற்றும் இதர அவஸ்தைகளால் தன் உணர்வு கீழே இறங்கா வண்ணம் அருள் உதவியது என்று கூறுகிறார்

மாறாக் கருணை என்மேல் வைக்க வந்ததென்னையோஅருள் தன் மீது கருணை மழை பொழிந்தது பற்றி வியந்து போகின்றார் வள்ளல் பெருமான்

மதியிலேன் நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னையோஇந்த அருள் கிடைக்க தான் முன்னர் செய்த தவம் தான் காரணம் என்று கூறுகின்றார்

( தற்கால சன்மார்க்கத்தவர்கள் கவனிக்க : ஜீவகாருண்யம் என்று கூறிக்கொண்டு வெறும் சோறு மட்டும் போட்டுக்கொண்டிருக்கவில்லை வள்ளல் பெருமான் , கூடவே தவமும் செய்தார் )

திரண்ட கருத்து :

அருள் தனக்கு எவ்வாறெல்லாம் உதவி செய்தது பற்றி வியந்து பாடிஅது தன் உணர்வு கீழே இறங்காமல் பார்துக் கொண்டது முதல் , அது தனக்கு செய்த உதவிகளை எண்ணி வியந்து போகின்றார்அதற்கு தான் முன்னர் செய்த தவம் தான் காரணம் என்கிறார்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s