மெய்யருள் வியப்பு –33
1 புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன்
பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன்
தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன்
தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் ( பாடல் 75 )
புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன் – தன்னை சிறுமைப்படுத்தி ஆன்மாவையும் திருவடியையும் பெருமைபடுத்துகிறார்
பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் – ஆன்மாவிற்கே தான் அடிமை ஆகிவிட்டேன் என்கிறார்
தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் – ஆன்மாவின் தயவினால் கருணையினால் சுழிமுனை நாடி மீதேறினேன்
தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் – ஆன்மா நிலை என்னும் தவள மாடத்தை அடைந்தேன்
திரண்ட கருத்து :
ஆன்மாவுக்கு அடிமை ஆனதால் – அதனால் கிடைத்த ஆன்மாவின் தயவினால் கருணையினால் ஆன்ம நிலை என்னும் தவள மாடம் அடைந்ததை இங்கு வள்ளல் பெருமான் விரித்துரைக்கின்றார்
வெங்கடேஷ்