இரசவாத வித்தை – உயிர்க் கொல்லி
உண்மைச் சம்பவம் – சென்னை
ஆம் – இது உயிர்க் கொல்லி
ஒரு அன்பர் இந்த வித்தையை ஒரு குருவிடமிருந்து கற்றுக்கொண்டார் – ஆனால் அடங்கியிராமல் ரொம்ப குதித்துக்கொண்டிருந்தார்
தினம் இந்த பொடியைச் செய்வார் – இந்தப்பொடியை எதில் போட்டாலும் அது தங்கமாக மாறிவிடும்
தன் காரில் சிகரெட் பிடித்தபடியே சுற்றி வருவார் – சிலரிடம் எனக்கு இந்த வித்தை தெரியும் என்று ஜம்பம் அடித்தபடி இருந்தார் – அவர்களிடம் செய்தும் காட்டுவார்
மக்கள் திகைத்துப்போய்விடுவர்
அவர் நண்பர்கள் ” யாரிடமும் இதைப்பற்றி சொல்லிக்கொள்ளாதே – உன் உயிருக்கு ஆபத்தாய் முடியும் ” என எச்சரித்தனர்- அவர் கேட்டுக்கொள்ளவில்லை
ஒரு நாள் அவர் காரில் பிணமாய்க் கிடந்தார் – அந்த பொடி டப்பி காணவில்லை – அதுக்காக கொலை செய்துவிட்டனர்
வள்ளல் பெருமான் இது ஆசை இல்லாதவர்க்கே சித்திக்கும் என்றார்
தகுதி உடையவர்க்கு தான் வித்தை தெரியும் – இல்லாதவர்க்கு சித்தித்தால் நீண்ட நாள் நிலைக்காது
இந்த வித்தை தெரிந்தவர் தன் சொந்த நலனுக்கு இது பயன்படுத்தக் கூடாது – வள்ளல் பெருமான் ஒரு நாளும் தனக்கு காசு வேண்டும் என்று பயன்படுத்தியதில்லை
வெங்கடேஷ்