சுத்த சாதகம் – நூல் அறிமுகம்
இந்த நூலை அருளியவர் விருத்தாசலம் குமார தேவர் ஆவார்
விருத்தாசலம் பெரிய நாயகி அருளியதில் இந்த நூலை அருளினார்
இந்த நூல தான் உலகுக்கு முதன்முதலில் கூறிய விஷயம் – இறந்தவர் மீண்டும் உடல் எடுப்பர் – மீண்டும் பிறவி என்னும் சுழலில் வருவர்
இந்த நூல் சொல்லும் முன்னர் வரை – சமய மதங்கள் மாண்டவர் எல்லாம் தத்தம் தெய்வங்களின் முடிவான இருப்பிடமாகிய கைலாயம் – வைகுண்டம் சென்று அவனுடன் கலந்து விடுவர்.
அந்த மூட நம்பிக்கையை சுக்கு நூறாக உடைத்துப் போட்டது இன்னூல்
யார் தத்துவமசி வார்த்தையின் பொருளை முழுதும் தன் சாதனத்தில் உணர்ந்து அனுபவத்திற்கு வருகின்றாரோ , அவரே மரணத்தை வென்று , மரணமிலாப் பெருவாழ்வு வாழ்வார் என்று உரைத்தது இன்னூல்
இந்த அனுபவம் வந்த பின் எத்தனை பிறவிகளில் மரணமிலாப் பெருவாழ்வு என்பதையும் இன்னூல் விளக்குகின்றது
அன்பர்கள் வாங்கிப் படிக்கவும் – யாரும் இதுக்கு உரை எழுதவில்லை
வெங்கடேஷ்