யோகத்தின் அடிப்படை காரியம் ???
யோகத்தின் அடிப்படை காரியம் என்னவெனில் :
சித்தத்தின் விருத்தியைக் கட்டுப்படுத்துவது
யோகத்தின் விளக்கம் – பதஞ்சலி யோக சூத்திரம்
சித்த விருத்த நிரோதஹ :
சித்தத்தின் விருத்தியைக் கட்டுப்படுத்துவது
அதனால் நாம் சாதனத்தின் போது மனம் செயல்படுவதை தானாகவே கட்டுக்குள் வரவழைப்பது ஆகும் – வலிய அடக்க முயற்சிக்கக் கூடாது – அது நடக்கவும் நடக்காது
மனதை கட்டுப்படுத்துவது என்பது மூளையில் இருக்கும் 3000 கோடி neurons செல்களையும் அமைதிப்படுத்துவது ஆகும் , தாலாட்டி தூங்க வைப்பதாகும் – இது மிகவும் கடினமான செயல் ஆகும் – அவ்வளவு எளிதல்ல
மனம் விரிதல் என்பது இல்லை – அது ஏற்கனவே விரிந்து தான் இருக்கின்றது – அதனால் தான் நாம் மிகவும் துன்பத்தில் இருக்கின்றோம்
மனம் விரிந்து விரிந்து அதன் அளவு குண்டு கல்யாணம் மாதிரி ஆகிவிட்டது
அதை நாம் ஊசி அளவுக்கு கொண்டு வந்து , பின் மேலும் அதை ஒன்றும் இல்லாமல் செய்ய வேண்டும் ( பூஜ்யம் ) – அதை சாதனத்தின் மூலம் செய்ய வேண்டும்
இந்த அனுபவத்தைத் தான் பைபிள் வாசகம் நிரூபிக்கின்றது
” its easy for a camel to enter into the eye of a needle than for a rich man to enter into the kingdom of God ”
rich man = குண்டு கல்யாணம் மாதிரி இருக்கும் மனம் – எல்லா ஆசைகள் – ராக துவேஷங்கள் உடன்
kingdom of God = சுழிமுனையினுள் இருக்கும் ஆன்மா / சிவம் – அ பெ ஜோதி
FB யில் சிலர் மனம் விரிவடைந்தால் தான் அனுபவம் என்று பகிர்ந்து இருந்தனர் – ஆனால் மனம் விரிவடையக் கூடாது – மேலும் விரிவடைய விடக் கூடாது
அதை சுருக்க வேண்டும் என்பது தான் என் அனுபவம்
வெங்கடேஷ்