தவத்தின் பயன் – சாதகரின் நிலை
திருமூலர் திருமந்திரம்
ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனும் அங்கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.
திரண்டக் கருத்து : சாதனத்தில் – தவத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு , மனம் ஒடுங்கிவிட்டால் , அவர்கள் ஆசையை துறந்துவிட்டதால் , எதுக்கும் அஞ்சுவதில்லை, மரணத்தை வென்றுவிடுகிறார்கள் – அவர்கள் இரவு பகலற்ற துவாதசாந்த்ப்பெருவெளியில் ( ஆன்ம நிலை ) இருப்பார்கள் – அவர்களுக்கு துன்பம் இல்லை
வெங்கடேஷ்