திருமந்திரம் – வாசி பெருமை
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள் உண்ணானலே களி தரும்
துள்ளி நடப்பிக்கும் சோம்பு தவிர்க்கும்
உள்ளது சொன்னோம் உணர்வு உடையோர்க்கே
கருத்து :
புரவி = வாசி
இது உள் சுவாசம் – கடவுள் சுவாசம் ஆகும்
நம் புறக்காற்று சுவாசிப்பது நின்றால் தான் இது உற்பத்தி ஆகும் என்பது இயற்கை நியதி
இது உண்டாகி , சுழிமுனை நாடியில் மேலேறினால் , கள் உண்ணாமலே இன்பம் கொடுக்கும் – மிக சுறுசுறுப்பாக சோம்பல் இல்லாமல் இருப்பார்கள் என்று தன் அனுபவம் கூறுகின்றார் திருமூலர்
வெங்கடேஷ்