நயன தீக்கை
சிவவாக்கியர்
கண்ணில் இருப்பனே கருங்கடல் கடைந்த மால்
விண்ணில் இருப்பனே மேவி அங்கு நிற்பனே
தன்னுள் இருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுள் இருப்பனே எங்குமாகி இருப்பனே
கண்ணில் இருப்பனே கருங்கடல் கடைந்த மால்
= கண்மணியில் ஜோதியாக சுடர் விடுபவன் திருமால்
அது தான் திருவடிகள் ஆகும்
இதை விட சன்மார்க்கத்தவரே என்ன வேண்டும்? – ஒரு சித்தர் சொல்கின்றார் – திருவடிகள் பற்றி – அதையெல்லாம் நம்ப மாட்டீர்களோ ??
என்னிடம் கேள்வி கேட்கின்றார்கள் – கண் தீக்கை பெற்றவன் தான் கடவுளை பார்க்க முடியும் எனில் – குருடன் என்னாவது ?? சற்குரு செல்வராஜ் ஐயா குருடனாலும் கடவுளை பார்க்கமுடியும் என்று சொல்லியிருக்கின்றார் தெரியுமா ?? எங்கின்றனர்
அதாவது அவர்கள் என்னை கலாய்க்கின்றார்களாம் – என்னை ஓரங்கட்டுகின்றார்களாம்
நான் பதில் உரைத்தேன் – சரி அப்படியெனில் பரலோகத்திலிருக்கும் செல்வராஜிடம் சென்று கேட்கவும் – என்னிடம் கேட்க வேண்டாம்
மேலும் நான் கூறினேன் – அதெப்படி ஒரு சிறு தெய்வம் காளி கூட அங்கஹீனம் இல்லாத ஒருவனை தான் பலியாக ஏற்றுக்கொள்ளும் போது, நிறையான தெய்வம் அ பெ ஜோதி. நிறையான ஒரு மனிதனால் தான் ஆன்மாவையும் / அ பெ ஜோதி காண முடியும் என்றேன்
வாய் மூடிச் சென்றனர்
வெங்கடேஷ்