திருமந்திரம் – புரியட்ட காயம் – விளக்கம்
அத்த நமைத்த வுடலிரு கூறினில்
சுத்தம தாகிய சூக்குமம் சொல்லுங்கால்
சத்த பரிச ரூப ரசகந்தம்
புத்திமா னாங்காரம் புரியட்ட காயமாமே
கருத்து :
இறை அமைத்த இந்த உடலில் ரெண்டு உள்ளது
1 ஸ்தூல தேகம்
2 சூக்கும தேகம்
பின்
1 சத்த – காது – கேட்டல்
2 பரிச – உடல் – தொடுணர்வு
3 ரூப – பார்க்கும் உணர்வு
4 ரச – சுவை உணர்வு – நாக்கு
5 கந்தம் – மூக்கு – முகர் உணர்வு
6 புத்தி
7 மனம்
8 அகங்காரம்
இந்த எட்டும் சேர்ந்தது புரியட்ட காயம் என்று விளக்குகின்றார் மூலர் பெருமான்
வெங்கடேஷ்