திருமந்திரம் – விந்து ஜெயம்
அமுதம் உற்பத்தி செயும் விதம் அறிவித்தவாறு
சாற்றிய விந்து சயமாகும் சத்தியால்
ஏற்றிய மூலத் தழலை மூட்டி
நாற்றிசை ஓடா நடுநாடி நாதத்தோடு
ஆற்றி அமுதம் அருந்த விந்தாமே
கருத்து :
விந்து ஜெயமாகும் – எப்போது எனில் ??
கண்கள் மூலம் பஞ்ச இந்திரியங்களையும் ஒன்றாக்கி , அதன் ஒளிகளினால் உஷ்ணம் உருவாக்கி , மேலும் விந்து கொண்டு மூலத்தில் கனலை உருவாக்கி , அதை சுழிமுனை நாடியில் மேலேற்றி நாதத்துடன் கலக்கச் செய்தால் ” அமுதம் ” அருந்தலாம் என் கின்றார் மூலர் பெருமான்
அமுதம் = நாதம் + விந்து கலந்தால் உருவாகும் என்று விளக்குகின்றார்
மூலத்தில் விந்து
சுழிமுனை உச்சியில் நாதம்
வெங்கடேஷ்