திருமந்திரம் – சுத்த சிவத்தின் பெருமை
நாடவல் லார்க்கு நமனில்லை கேடில்லை
நாடவல் லார்கள் நரபதி யாய்னிற்பர்
தேடவல் லார்கள் தெரிந்த பொருளிது
கூடவல் லார்கட்கு கூறலு மாமே
கருத்து :
சுத்த சிவத்தை நாடுபவர்களுக்கு எமனில்லை – ஒரு துன்பமும் துயருமில்லை – அவனை நாடுபவர்கள் மனிதர்களுக்கு தலைவர்களாக இருப்பர்
சிவத்தை தேடுபவர்களுக்கு இவன் யார் என்ற அருமை பெருமை – இடம் – தன்மை – குணம் எல்லாம் தெரிந்து இருக்கும்
சிவத்துடன் கூடும் ஆர்வம் – மலபரிபாகம் – அதற்கேற்ற வினை உள்ளவர்களுக்கு – வழி – துறை – சாதனம் – தவம் கூறலாம் – அவர்களும் சிவத்துடன் கலக்கக் கூடும்
வெங்கடேஷ்