திருக்குறள் – சன்மார்க்க விளக்கம்
கடவுள் வாழ்த்து
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்
கருத்து :
யார் ஒருவர் சதா எரிந்த வண்ணம் இருக்கும் 5 இந்திரியங்கள்/புலங்களையும் அவிக்கின்றனரோ , யார் இந்த உலகம் பொய் என்று கண்டு , இதன் பின்னால் செல்லாமல் மெய் என்னும் ஆன்மாவில் லயித்தும் , பற்றியும் வாழ்கின்றார்களோ அவர்கள் இந்த புவியில் நீடூழி வாழ்வார்கள் – வாழ்வாங்கு
5 இந்திரியங்கள்/புலங்களையும் அவித்தல் என்பது , இதன் சக்திகள் – இயக்க மையங்கள் – புள்ளிகள் யாவையும் பிரணவ மத்திக்கு சேர்த்துவிட்டால் , அது வெற்றுப்புலங்களாக சக்தியற்று நின்றுவிடும் – அப்போது இது புலங்கள் அவிக்கப்பட்ட நிலைஆகும்
வெங்கடேஷ்