” இதுவும் கடந்து போகும் ”
இது மிகவும் பிரசித்தி பெற்ற சொற்றொடராகும்
இது கஷ்ட நிலைக்கு மட்டும் பொருந்தும் சொற்றொடரில்லை – நன்மை பயப்பதுக்கும் உதவும் சொற்றொடராகும்
எப்படியெனில் ??
நாம் சாதனையில் ஒரு அனுபவம் வருகிறதெனில்
1 நெற்றியில் நீல ஒளி வருகிறது
2 மனம் அடங்கி , எண்ணமிலா நிலை சித்திக்கிறதெனில்
உடனே மனம் இது தான் உச்சம் என்று முடிவு கட்டச் சொல்லும் – நம்மை ஏமாற்றப் பார்க்கும் – ஆனால் நாம் ஏமாறக்கூடாது
இல்லை இன்னும் மேல் நிலை – இதை விட உசந்த அனுபவங்கள் உள்ளன என்று மேலும் முயற்சிக்க வேண்டுமேயல்லாது – அங்கேயே தங்கி/நின்று விடக்கூடாது
கடைனிலை என்னவென்று தெரிந்திருக்க வேண்டும் – அது சித்திக்கிற வரையில் சாதனம் பயில வேண்டும்
” இதுவும் கடந்து போகும் ” – இதை நான் இப்படித்தான் எடுத்துக்கொள்கிறேன்
வெங்கடேஷ்