திருமந்திரம் – சுத்த சிவ தரிசனம்
அருட்கண் ணிலாதார்க் கரும்பொருள் தோன்றா
அருட்கண் ணுளோர்க்கு எதிர்தோன்றும் அரனே
இருட்கண்ணி நோர்க்கங்கு இரவியும் தோன்றா
தெருட்கண்ணி நோர்க்கெங்குஞ் சீரொளி யாமே
கருத்து :
அருட்கண் = ஞானக்கண் – நெற்றிக்கண்
நெற்றிக்கண் திறக்காதவர்க்கு சுத்த சிவம் தோன்றாமல் மறைந்து நிற்கும்
நெற்றிக்கண் திறந்தவர்க்கு சுத்த சிவம் எதிரில் நிற்கும்
மாயை என்னும் இருள் உள்ள கண்ணுக்கு ஆன்மாவாகிய சூரியனும் தோன்றாமல் மறைந்து நிற்கும்
ஞானக் கண்ணுக்கு எங்கு நோக்கினும் சிவ மயமாமே – சிவ ஜோதியே
வெங்கடேஷ்