சன்மார்க்கம் உருப்படாமல் இருக்கச் செய்பவர்கள் – பாகம் 2
1திரு ஈரோடு கதிர்வேல்
இவர் எட்டிரெண்டுக்கு என்னமோ உளறுகிறார் ? சரியான விளக்கம் தெரியவில்லை
” வாசி என்னு கட்டமைப்பை உருவாக்கத் தெரியாத ஆன்மீக /சன்மார்க்க குருடு ”
இவர் தான் எல்லா சன்மார்க்கக்கூட்டங்களில் சிங்கம் என முழங்கி வருகிறார் – முதல் உலக சன்மார்க்க மானாட்டில் கூட உரையாற்றினார் – என்ன பேசினாரோ தெரியாது
ஆராய்ச்சி மற்றும் சாதனம் செய்யாத வரையில் ஞானியரின் பாடல்களுக்கு சரியான விளக்கம் எடுக்க முடியாது என்பது உண்மை
2 மன்னை புரவலர்
இவரும் அரசுப்பள்ளி ஆசிரியர்
இவர் சத்திய ஞான சபையில் காட்டப்படும் ஜோதி – அ பெ ஜோதி என உளறி வருகிறார் – எப்படி அது அ பெ ஜோதி ஆக இருக்க முடியும் ?? அது ஆன்ம ஜோதி தான் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இவர்கள் மற்றவர்க்கு விளக்கம் கூற வருகிறார்கள்
இந்த ஊனக்கண்ணால் எப்படி அ பெ ஜோதி காண முடியும் என்பது இவர்களுக்கு தெரியவில்லை
இவரும் கல்வி ஞானி தான் – தன் கல்வி வைத்து ஞானம் தேடுகிறார் – மற்றவர்க்கும் சொல்கிறார்
என் பதிவுகளைப்பார்த்து தி மலை குழு சேர்ந்த ஒரு சாது ?? ” நீங்கள் சன்மார்க்கம் பற்றி கவலைகொள்ள வேண்டாம் – சன்மார்க்கம் நானே நடத்துகிறேன் என வள்ளல் கூறியுள்ளார் என்றார் ”
நான் கேட்கிறேன் – அப்படியெனில் – ” எல்லா சன்மார்க்க சங்கங்களையும் இழுத்து பூட்டிவிட்டு , அவரவர் வேலையைப்பார்ப்பது தானே ?? அதான் வள்ளல் தான் சன்மார்க்கம் நடத்துகிறார் என்பதால் ”
நீங்கள் ஏன் அன்னதானம் – தியான வகுப்புகள் – சன்மார்க்க சத்சங்கம் என த நாட்டில் மட்டுமல்லாமல் – சிங்கப்பூர் – பர்மா – மலேசியாவுக்கு சென்று நடத்த வேண்டும் ??
சும்மா இருக்க வேண்டியது தானே ?? ஏன் செய்யவில்லை ??
சன்மார்க்க உலகம் பதில் சொல்லட்டும் – சரி தானே ??
வெங்கடேஷ்