சிவவாக்கியர் பாடல்

சிவவாக்கியர் பாடல் நீள வீடு கட்டி நெடுங்கதவு சாத்துவீர் வாழ வேண்டும் என்றலோ மகிழ்ந்திருந்த மாந்தரே காலன் ஓலை வந்திடும் கைகலந்திடு நின்றிடும் ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே கருத்து : புது வீடு கட்டி வாழ நினைக்கும் போது எமன் வந்து கொண்டு போவான் நம் உயிரை – எல்லாம் நிலையில்லா வாழ்க்கை ஆனால் விஷம் உண்ட சுத்த  சிவத்தின்,   அம்மையின் திருப்பாதம் மெய் உண்மை சத்தியம் எங்கிறார் சிவவாக்கியர் வெங்கடேஷ்

தேகமும் தேசமும் – 8

தேகமும் தேசமும் – 8 இறையின் வருகையை சாதகனுக்கு தெரியப்படுத்தும் ஊர் “வந்தவாசி ” இது வந்துவிட்டால் ஆன்ம தரிசனம் சர்வ நிச்சயம் யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே போல் வெங்கடேஷ்

சாதகனின் கடமையும் தர்மமும் 17

சாதகனின் கடமையும் தர்மமும் 17 ஒரு குடும்பஸ்தன் தன் சம்பாத்தியத்தை தற்போதைய செலவுக்கும் எதிர்கால சேமிப்புக்கும் பயன்படுத்துவது போல் ஒரு ஆன்ம சாதகனும் சுவாசம் விட்டுக்கொண்டே சுவாசம் விடா வாழ்வுக்கு தூங்கிக் கொண்டே தூங்கா வாழ்வுக்கும் கண் விழித்த நிலையிலேயே இருந்து இருந்து உள் விழிப்பு நிலைக்கு உயர்வதும் ஆசையில் உழன்றபடியே ஆசையற்ற அன்புக்கு உயர்வதும் உலக வாழ்வில் இருந்தபடியே அதனுடன் ஒட்டாமல் வாழப்பழகுவதுமாகும் வெங்கடேஷ்

சமயமதக்கோவிலும் சன்மார்க்கக் கோவிலும்

சமயமதக்கோவிலும் சன்மார்க்கக் கோவிலும் திருமலை சீரங்கம் பழனி சமயமதக்கோவில்கள் இதை தாண்டினால் தாமரைக்கோவில் ( புது தில்லியில் ) இது சர்வ சமயக்கோவில் இதையும் தாண்டினால் சன்மார்க்ககோவில் மாணிக்க வாசகர் கட்டிய ஆவுடையார் கோவிலும் வள்ளல் பெருமான் கட்டிய சத்ய ஞான சபையும் தான் இது மனிதனின் பரிணாம வளர்ச்சி படிகள் ஆகும் வெங்கடேஷ்