அருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவ நிலை 12
நானே தவம்புரிந்தேன் நானிலத்தீர் அம்பலவன்
தானேவந் தென்னைத் தடுத்தாண்டான் – ஊனே
புகுந்தான்என் உள்ளம் புகுந்தான் உயிரில்
புகுந்தான் கருணை புரிந்து.
பொருள் :
நான் தவம் செய்தேன் அதனால் உலகத்தவரே – பொதுவில் ஆடும் சிற்றம்பலத்தான் என்னை உலகம் பக்கம் சாயாமல் தன் பக்கம் திருப்பிகொண்டான்
அபெஜோதி சுத்த சிவம் என் உடல் – ஆன்மாவில் கலந்து கொண்டான் தன் கருணையினாலே
இதில் வள்ளல் எங்கு தான் அன்னதானம் செய்து எல்லா சித்தி பெற்றதாக கூறுகிறார் ??? – தவம் செய்து தான் அடைந்ததாக அறைகிறார் – விழிமின் சன்மார்க்கத்தீர் – மோசம் போகாதீர்
வெங்கடேஷ்