மணிமேகலை புதிரின் பதில் இதோ
மணிமேகலை – கதையும் உண்மையும்
சீத்தலைச் சாத்தனார் –
காய சண்டிகை – தன் கணவர் விஞ்ஞையன் – காவிரிப்பூம்பட்டினம் வருகை – விருச்சிக முனிவர் – 12 வருடம் ஒரு கனி தரும் அற்புத மரம் – அது 12 ஆண்டுக்கு பசி நீக்கும் வல்லமை உடையது
அந்தக் கனியை காய சண்டிகை அழித்தல் – அதனால் அவள் சாபம் அடைதல்
மணிமேகலையிடம் உணவு உண்ணல் – அமுதசுரபி உணவு உண்ணல் – சாபம் நீங்கல்
இது கதை
இதன் உண்மை தத்துவம் என்ன??
எங்காவது ஒரு கனி 12 வருடத்துக்கு பசி நீக்குமா ??
இதன் தாத்பரியம் கூறவும்
இது மனித வயித்துப்பசி பற்றியதல்ல – இது ஜீவனின் ஆசைப்பசி பற்றியது
ஒரு வரியில் பதில் : ஒரு ஜீவன் ஆன்மாவாக மாறுவதும், வாதம் ஆவதும் தான் உண்மைத் தத்துவம்
அதாவது
காய சண்டிகையின் தீராப் பசி – யானைப்பசி நோய் = நம் ஜீவனின் தீரா ஆசைப்பசி ஆகும்
அது தீருவது அமுதசுரபியின் அன்னத்தால் = ஆன்மாவாக வாதம் ஆனால் நம் ஆசைகள் ஒழியும் – ஆன்மாவுக்கு ஆசை கிடையா
அதனால் இவ்வாறு புனையப்பட்டுள்ளது
12 ஆண்டுக்கு ஒரு மு்றை கனி தரும் மரம் = அதாவது அளவற்ற காலம் தவம் செய்து – பிரணவ மரம் அமைத்து அதில் ஆன்மா எனும் கனி தருவிக்க வேண்டும்
மரம் = பிரணவ மரம் – தவம் செய்து அமைக்க வேணும்
கனி = ஆன்மா
ஜீவன் ஆன்மாவாக வாதமாக வேண்டும் என்ற ஒரு வரிக்கு இத்தனை பெரிய கதை சொல்லப்பட்டிருக்கு
இது உண்மையில் நடந்திருக்க வாய்ப்பிலை
இது தத்துவத்தை விளக்க வந்த கதை கட்டுக்கதை – அவ்வளவே
இந்த பதில் தராத அட்டமா சித்தி பெற்றுவிட்ட , எட்டிரண்டு முடித்தவிட்ட , சித்த புருஷர் ஆவதில் 80% பூர்த்தி ஆகிவிட்ட Sasi Ram நினைக்கும் போது வியப்பாகவும் இருக்கு – அதே சமயம் பாதி பதில் சரியாக கொடுத்த குரு சண்முகம் /சித்ரா சிவம் நினைக்கும் போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கு
இவ்விருவர்க்கும் வாழ்த்துக்கள்
வெங்கடேஷ்