நம் வாழ்வும் வண்ணங்களும்

நம் வாழ்வும் வண்ணங்களும் வண்ணமது பலவுண்டு வண்ணத்திற்கொரு குணமுண்டு. விந்தைமிகு மனவியலில் விளக்கமது பலவுண்டு. ஆழமான மனவியலை ஐயமற நானறியேன். எத்தனையோ இருந்தாலும் இயம்புகிறேன் தெரிந்தவரை. சிவந்த நிறமதுவும் சீற்றமது கொண்டுவரும் ஆற்றலை தூண்டிவிடும் அனலாய் கொதிக்கவைக்கும். பச்சை நிறமதுவும் இச்சைதனை தூண்டிவிடும் இனிய உணர்வு கொண்டுவரும். மஞ்சள் நிறமதுவும் மங்களமாய் இருக்கவைக்கும் மனமதிலே மென்ணுணர்வு தரும். அடர்நீலமதுவுமே அடிமனதை அமைதிபடுத்தும் ஆழ்நிலையை உணரவைக்கும். (சிலருக்கு பற்பல மன உணர்வுகளை தூண்டும்) கருப்பு நிறமதுவும் கலக்கமது கொண்டுவரும் உள்ளத்தெளிவையது…

தெளிவு 205

தெளிவு 205 ஆன்ம சாதகன் ” இறையின் மாய வலையில் ” சிக்குண்டு இருக்கான் அதிலிருந்து வெளி வரப் பார்க்கிறான்  வழி வகை தேடுகிறான் வெளிவரத் தவிக்கிறான் சாமானியனோ “இன்டர்னெட் என்னும் மாயவலையிலும்” ” சமூக வலையில் சிக்குண்டும் ” வெளி வரத்தெரியாமல் தவிக்கிறான் வெளி வரத் தெரியவிலை இந்த விஷயத்தில் ரெண்டு பேரும் ஒரே படகில் தான் வெங்கடேஷ்

” உண்மையான – நல்ல – விவரம் தெரிந்த குரு ” – யார் ??

” உண்மையான – நல்ல – விவரம் தெரிந்த குரு ” – யார் ?? யார் எனில்?? அவர் தினமும் மீன் கொடுக்காமல் மீன் பிடிக்கக் கற்றுத் தருபவர் அதாவது “சீடனுக்கு பிரச்னை வருங்கால் அவரை அணுகாமல் அவனே சரி செய்து கொள்ளும் வல்லமை – திறம் கற்றுக்கொடுப்பவர் எவரோ -அவரே சிறந்த நல்ல குரு ஆசான் ” ஆவார் மேலும் ” அவர் புற குரு மட்டுமே என்றறிந்து அவர் அகக்குருவாம் ஆன்மா –…

” உள்ளே எதுவோ அதுவே வெளியே “

” உள்ளே எதுவோ அதுவே வெளியே ” முடியின் வேர் கருத்திருந்தால் முடி கருப்பாக வெளிவரும் வளரும் அதுவே உள்ளே வேர் வெளுத்திருந்தால் முடி வெள்ளையாக வளரும் இது உலக நியதி – இயற்கையும் கூட அது போல் தான் நம் உள்ளே எது இருக்கோ அதுவே வெளியில் வருமே அல்லாது உள்ளுக்குள் இல்லாதது வெளியே வராது உள்ளுக்குள் அசுப குணங்கள் இருந்தால் அதுவே ஆசை கோபம் குரோதம் வன்மம் பொறாமை மோகம் எல்லாம் வெளிப்படும் இதுவே…

எலி – பயத்தின் உச்ச கட்ட அனுபவம் – உண்மைக்கதை – அனுபவம்

எலி – பயத்தின் உச்ச கட்ட அனுபவம் – உண்மைக்கதை – அனுபவம் ஓர் எலிக்கு சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் -இலையெனில் அதன் பல் வளர்ந்து கொண்டே இருக்கும் – இது இயற்கை அமைத்த வினோத அமைப்பு அதனால் அது எதையாவது கடித்துக்குதறிவிடும்  அது மரத்தாலான பலகை – உணவு எதுவானாலும் கடித்து தின்று விடும் இந்தியாவில் ஓர் ஆண்டுக்கு எலி ரூ 500 கோடி மதிப்பிலான உணவு தானியங்களை உண்டுவிடுதாம் எப்படி இதன் சாமர்த்தியம் ??…

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 55

அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 55 ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய் அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும் போது மைஅகத்தே பொருந்தாத வள்ளல்அரு கணைத்தென்  மடிபிடித்தார் நானும்அவர் அடிபிடித்துக் கொண்டேன் மெய்அகத்தே நம்மைவைத்து விழித்திருக்கின் றாய்நீ விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகஎன் றெனது கைஅகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார் கருணையினில் தாய்அனையார் கண்டாய்என் தோழி. பொருள் : சந்தேகமுற்று மனம் தெளியாதார் எலாம் புறத்தே இருக்க , நான் – வள்ளல் பெருமான் ,…

கும்பகோணம் – ஊர் பெருமை சிறப்பு – 3

கும்பகோணம் – ஊர் பெருமை சிறப்பு – 3 இந்த ஊர் சுற்றி 9 கிரகங்கள் அமைக்கப்பட்டிருக்கு என்பது னாம் அறிந்த உண்மை ஏன் ?? கும்பகோணம் = பிரணவத்தின் சொரூபம் ஆம் பிரணவத்தை சுற்றி நவ நாயகர்கள் சூக்குமமாய் அமைந்துள்ளனர் என்பதை புற விளக்கமாக கூறியுள்ளனர் நம் அறிவில் சிறந்த முன்னோர் சூரியன் – சூரியனார் கோவில் சந்திரன் – திங்களூர் செவ்வாய் – வைத்தீஸ்வரன் கோவில் புதன் – திருவெண்காடு குரு – ஆலங்குடி…

திருவாலங்காடு – ஊர் பெருமை சிறப்பு

திருவாலங்காடு – ஊர் பெருமை சிறப்பு இந்தத் திருத்தலம் அரக்கோணம் அருகே உளது இந்த ஊர் பெயர்க்காரணம் – ” விஷம் ஆகிய ஆலம் உள்ள காட்டில் – பிரமத்துவாரத்தில் சிவம் திரு நடம் செயுது ” என்ற பொருளில் விளங்குது ஆலம் என்பது  இருள் ஆகிய விஷம் தோய்ந்த துவாரம் குறிப்பதாகும் இங்கு சிவத்துக்கும் காளிக்கும் நடனப்போட்டி நடைபெற்று , அதில் இறுதியில் சிவம் வென்று ” நட ராஜர் ” என்ற பட்டம் வென்றார்…

வாழ்வின் இலக்கணங்கள்

வாழ்வின் இலக்கணங்கள் ** எண்ணமிலா நிலையதே ” யோகம் ” ** சுயதரிசனமே ஆன்ம தரிசனமே  பூஜைகளில் சிறந்த பூஜை ** ” விந்து ஒழியா போகமே சிறந்த போகம் ” வெங்கடேஷ்