மனிதரில் இத்தனை நிறங்களா 11 ??
உண்மைச் சம்பவம் – சென்னை 1992
அப்போது நான் Std Motorsல் பணி
என் நண்பன் வீட்டுக்கு சென்ற போது – அவன் தன் பிரச்னை கூறினான்
அவன் தந்தை பொறுப்பில்லா ஆள் – வீட்டிலே இருப்பார் , வேலை இல்லை – வெட்டி ஆஃபிசர் – தாய் தான் அரசுப் பணி செய்து அவர்களை படிக்க வைத்து ஆளாக்கினார்
அவன் அக்கா தன் அப்பாவை பார்த்த பிறகு எந்த ஆணையும் நம்பத் தயாரில்லை – அதனால் திருமணம் வேண்டாம் என்றாள்
:
அதனால் இவனுக்கு கல்யாணம் தள்ளிப்போயிற்று – இவனுக்கு செய்யலாமா என குடும்பத்தார் யோசித்தனர்
நான் அவன் தாயாரிடம் இவனுக்கு முடித்துவிடுங்கள் – பின்னர் அவன் அக்காவுக்கு பார்க்கலாம் என்றேன்
இவன் மனைவிக்கு நடக்கும் வைபவங்கள் – தாய்மை – அவளை தாங்கும் விதம் – குடும்பம் கொடுக்கும் பெருமை மரியாதை பார்த்து – உன் அக்கா பொறாமைப்பட்டு உடன் கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்வார்கள் என்றேன் ்
கணவன் மனைவி உறவு – நெருக்கம் அன்பு எல்லாம் நேராகப்பார்த்து மனமாற்றம் வரும் என்றேன்
இவன் கல்யாணம் முடிந்தது
எண்ணியவாறே அவன் அக்கா மனம் மாறி மணத்துக்கு சம்மதம் தெரிவித்து கல்யாணம் செய்துகொண்டாள்
பெண்களுக்கு உரிய பொறாமை குணத்தை நான் நன்கு பயன்படுத்திக்கொண்டேன் – நல்ல பலன் கிடைத்தது
வெங்கடேஷ்