அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 59

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 59 வெம்மாலைச் சிறுவரொடும் விளையாடித் திரியும் மிகச்சிறிய பருவத்தே வியந்துநினை நமது பெம்மான்என் றடிகுறித்து பாடும்வகை புரிந்த  பெருமானே நான்செய்த பெருந்தவமெய்ப் பயனே செம்மாந்த சிறியேனைச் சிறுநெறியில் சிறிதும் செலுத்தாமல் பெருநெறியில் செலுத்தியநற் றுணையே அம்மானே என்ஆவிக் கானபெரும் பொருளே அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே பொருள் : சிறு பருவத்திலே – விளையாடும் வயதிலே எனை தடுத்தாண்டு திருவடி பெருமை குறித்து…

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 1

அருட்பா – 6 ம் திருமுறை – உய்வகை கூறல் – 1 அருட்பெ ருந்தனிச் சோதிஅம் பலத்திலே நடிக்கும் பொருட்பெ ருந்திரு நடமது போற்றுவீர் புலவீர் மருட்பெ ரும்பகை நீக்கிமெய் வாழ்வுபெற் றிடலாம்  தெருட்பெ ரும்பதத் தாணைஈ தறிமினோ தெளிந்தே. பொருள் : அருள் வெளியில் நடமிடும் தனி சோதியை போற்றுவீர் உலகீர் – அதனால் மயக்கம் எனும் பெரும் பகை நீங்கி உண்மை வாழ்வு வாழ்ந்திடலாம் தெளிவு உடை பதத்தின் – திருவடி மீது…

எதிரும் புதிரும் Oxymorons – தமிழ்

எதிரும் புதிரும் Oxymorons – தமிழ் எனக்குப்பிடித்தவைகள்் 1 திருமண நாள் வாழ்த்துக்கள் 2 நியாயமான தேர்தல் 3 மத நல்லிணக்கம் 4 ஊழலற்ற ஆட்சி 5 கறை படியா கட்சி 6 ஆமால்ல 7 பகல் நிலவு 8 பயங்கர அழகு 9 வந்து போகும் 10 தோன்றி மறையும் 11 பிரிந்து சேர்வோம் 12 போய்ட்டு வாரேன் 13 வந்து போங்க 14 கொஞ்சம் அதிகமா 15 இரவு சூரியன் 16 அழகான ராட்சசி வெங்கடேஷ்…

சிரிப்பு 278

சிரிப்பு 278 க மணி : ஏண்டா புள்ளைய போட்டு இப்டி அடிக்கிற?? செந்தில் : பின்ன என்ன அண்ணே – மார்க் சைபர் வாங்கி வந்திருக்கான் ஏன்னு கேட்டா  படிச்சத எல்லாம் மறந்து போயிட்றேன்னு சொல்றான் இதையே வள்ளலார் சொன்னா தூக்கி வச்சு ஆட்றீங்க – நான் சொன்னா அடிக்கிறீங்கன்னு கேக்கறான் க மணி : ஓ கதை அப்டி போவுதா ?? பின்னே வள்ளலாரின் சீடன் பையன் எப்டி பேசுவான் இப்டித்தான் பேசுவான் வெங்கடேஷ்

தெளிவு 385

தெளிவு 385 எப்போது கூர்மையாக “வெட்டும் கத்தி ” போல் இருக்கும் ஐம்புலன்களும் ” வெறும் அட்டை கத்தி ” போல் ஆகுதோ அப்போது தான் மேலேறும் வழி கிடைக்கும் திறக்கும் வெங்கடேஷ்

தெளிவு 384

தெளிவு 384 எப்போது சிற்றின்ப வாசல்கள் அவத்தை வாசல்கள் 2 அடைக்கிறோமோ ?? அப்போது தான் பேரின்ப வாசல் திறப்பதுக்கான வழி கிடைக்கும் வெங்கடேஷ்