அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 64

அருட்பா – 6 ம் திருமுறை – அருள் விளக்க மாலை – 64 உண்ணுகின்ற ஊண்வெறுத்து வற்றியும்புற் றெழுந்தும் ஒருகோடிப் பெருந்தலைவர் ஆங்காங்கே வருந்திப் பண்ணுகின்ற பெருந்தவத்தும் கிடைப்பரிதாய்ச் சிறிய  பயல்களினும் சிறியேற்குக் கிடைத்தபெரும் பதியே நண்ணுகின்ற பெருங்கருணை அமுதளித்தென் உளத்தே நானாகித் தானாகி அமர்ந்தருளி நான்தான் எண்ணுகின்ற படிஎல்லாம் அருள்கின்ற சிவமே இலங்குநடத் தரசேஎன் இசையும்அணிந் தருளே. பொருள் : உணவை வெறுத்து உடல் வற்றிப்போய் , தவத்தால் புற்று மூடி தவம் ஆங்காங்கே…

” அருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவநிலை ” – 1

” அருட்பா – ஆறாம் திருமுறை – சுத்த சிவநிலை ” – 1 1 கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என் எண்ணிற் கலந்தே இருக்கின்றான் – பண்ணிற் கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்  கலந்தான் கருணை கலந்து பொருள் : இறை சுத்த சிவம் அபெஜோதி என் கண்ணில் கலந்து நிற்கிறான் என் கருத்திலும் எண்ணத்திலும் கலந்து நிற்கிறான் என் பாட்டிலும் கலந்திருக்கின்றான் – கருணையினால் என் உயிரிலும் கலந்து நிற்கிறான் கண்ணில் கலந்து நிற்கிறான்…

தெளிவு 410

தெளிவு 410 மனமானது மௌனம் – அமைதி விரும்பாமல் ஆசை வயப்பட்டு ஐம்புலன்கள் வழியே புறம் ஏகினால் அது தான் ” மனதின் விகாரம் ” ஆம் அது தான் ” மன்மதன் “ இப்படி அலைந்தால் புலன்கள் மனம் வெறி அடங்கவிலை என பொருள் வெங்கடேஷ்

” இயற்கை ரகசியம்”

” இயற்கை ரகசியம் ” நம் மனம்  எந்தளவுக்கு அடங்கியுளதோ ?? எந்த அளவுக்கு எண்ணமிலாமல் உளதோ ?? அந்த அளவுக்கு அது கற்புடையதாக விளங்கும் அது கேட்டதைத் தரும் அது நினைத்ததை நடத்தித் தரும் இது தான் கற்பக விருட்சம் – அட்சய பாத்திரம் ஆம் வெங்கடேஷ்

” வியப்பு – விந்தை “

” வியப்பு – விந்தை ” நமக்கு பிடித்தவரின் திமிர் ஆணவம் கர்வமும் நமக்குப் பிடிக்கும் போல அதான் “ஜெஜெ ” வின் இந்த குணங்கள் என்னைக் கவர்ந்தன ஜெவிடமிருந்த போது இதெல்லாம் அழகாக இருந்தன என்ன வியப்போ விந்தையோ ?? வெங்கடேஷ்