சிரிப்பு 390
க மணி : என்னடா புது ஃபேன் வாங்கி மாட்டியிருக்கே – நல்லா ஓடுதா ??
செந்தில் : ஆமாண்ணே – தூசு அழுக்கு ஒட்டாதுனு சொன்னாங்க அதான் வாங்கி போட்டுப்பார்த்தேன்
சரியாத்தான் இருக்கு
க மணி : பின்ன என்னடா யோசிக்கிற ??
செந்தில் : ஆமாண்ணே – இந்த ஃபேன் மாதிரி நம்ம மனசிலயும் தூசி ஒட்டாமல் இருக்க வழி இருக்கான்னு ??
க மணி : ஞானி ஆயிட்டே வர்றியோ ??
எல்லாம் இருக்குடா – சித்தர் பாடல்ல இருக்கு – அதுக்கு தியானம் தவம் எல்லாம் செய்தா அது நடக்கும்
செந்தில் : சரி நானும் தியானம் செய்யப்போறேன்
க மணி : டேய் அதுக்கு ஏன் இந்த வழியா போறே ?? இது அன்னதானக்கூடத்துக்கு போற வழி
இப்படி போ – இது தான் தியான மண்டபத்துக்கு போற வழி – இப்படிப்போனா தான் உருப்படுவே
தெரியுதா??
வெங்கடேஷ்