திருவடி தவம் அனுபவங்கள் – 2
1 நம் குணத்தில் மாற்றம் நிகழும் – அதாவது பொறுமை நிதானம் எல்லாம் வரும்
2 நமக்கு பிறர் மீது கருணை நேசம் எல்லாம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகும்
இது மிக முக்யமான அனுபவம் ஆம்
இது தயவுக்கு கூட்டிச்செல்லும்
3 மற்றவர் படும் துன்பம் துயர் எல்லாம் நம்மால் அவர் நிலையில் இருந்து புரிந்து கொள்ள முடியும்
4 உடலில் இருக்கும் கழிவுகள் தவம் செயும் போது வெளியேறும் – இது மூக்கில் உதட்டில் ஏற்படும் அரிப்பால் புரிந்து கொள்ளலாம்
5 விழிப்புணர்வு அதிகமாகிக்கொண்டே வரும்
இது உடலைக்கட்டுப்படுத்தும் தந்திரம் ஆம்
இது ஆன்மாவின் செயல் ஆம்
6 உள்ளதை உள்ளபடி அறியும் தன்மை வரும் – மனம் – உலக வாழ்வு – உறவுகள் இதில் அடக்கம்
7 பர உதவிகள் – ஞானிகள் – காட்சியும் உதவியும் நமக்கு கிடைக்கும்
8 உடலில் இருந்து மலர் – கனி வாசம் வீசும் – இது விந்துவில் தவத்தால் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம் ஆம்
வெங்கடேஷ்