- சிங்கா சிங்கி
சிங்கா : சிங்கி இப்போதைய சன்மார்க்கத்தாரின் இலக்கணம் என்ன ??
சிங்கி : இவர்களாகவே வகுத்துக்கொண்டது – கற்பிதம்
செய்து கொண்டது
1 யார் வெள்ளை ஆடை அணிகிறார்களோ ??
2 யார் தலைப்பாகை அணிகிறார்களோ ??
3 யார் சமய மதத்தை தூஷணம் செய்கிறார்களோ ??
4 யார் வடலூர்க்கு மாத பூசத்துக்கும் / தைப்பூசத்துக்கும் தவறாமல் விஜயம் செய்கிறார்களோ ??
5 யார் 6ம் திருமுறை மட்டும் படிக்கிறார்களோ ??
6 யார் அன்னதானம் எனும் ஜீவகாருண்ணியம் என்பதை தலையாய கடமையாக செய்கிறாரோ ?
7 உட்கார்ந்தால் நடந்தால் தும்மினால் மகா மந்திரம் கிளி மாதிரி உச்சரிப்போர்
அவரெல்லாம் தான் உண்மையான சன்மார்க்கத்தார் என தப்பாக கற்பனை செய்து கொண்டுள்ளார்
ஆனால் இதையெல்லாம் தாண்டி
யார் திருவடி – கண்மணி தவம் செய்கின்றாரோ ??
அவர் சன்மார்க்க விரோதி ஆக பாவிப்பது தான் மற்றுமொரு தலையாய கடமை
உண்மை எங்கே இருக்கு ??
எங்கோ இருக்கு??
வெங்கடேஷ்