ஒரு அன்பர் சந்தேகம்
ஒருவர் என் பதிவு – நெற்றிக்கண் திறக்க – ஆன்ம அனுபவம் பெற 40 ஆண்டுகள் ஆகும் – படித்துவிட்டு – என்னிடம் தொலைபேசியில்
நான் 40 + ஆண்டாக தவம் செய்றேன் – இன்னமும் நெற்றிக்கண் திறந்ததாக தெரியவில்லையே – ஆன்ம அனுபவம் தரிசனம் கிட்டவில்லையே என்றார்
நான் : எப்படி தவம் செய்கிறீர் ??
அவர் : கண் மூடித் தான் – எல்லாரும் செய்வது மாதிரி தானே
நான் :எந்த யோகா என்றேன் ??
அவர் : பலது – மனவளக்கலை – வாழும் கலை – ஈஷா என்றார்
நான் : 40 என்ன – 400 ஆண்டானாலும் உங்கள் பயிற்சியால் அதை திறக்க முடியாது என்றேன்
கோபத்துடன் அலைபேசி வைத்துவிட்டார்
வெங்கடேஷ்