சுத்த தேகம் இலக்கணம்

சுத்த தேகம் இலக்கணம் ஆறாம் திருமுறை உற்ற துரைத்தல் விரைந்து விரைந்து படிகடந்தேன் மேற்பால் அமுதம் வியந்துண்டேன்கரைந்து கரைந்து மனம்உருகக் கண்ணீ­ர் பெருகக் கருத்தலர்ந்தேவரைந்து ஞான மணம்பொங்க மணிமன் றரசைக் கண்டுகொண்டேன்திரைந்து நெகிழ்ந்த தோலுடம்பும் செழும்பொன் உடம்பாய்த் திகழ்ந்தேனே. பொருள் : விரைவாக படிகள் பல கடந்தேன் அமுதம் உண்டேன் மனம் கரைய கண்ணீர் பெரும ஆன்ம தரிசனம் பெற்றேன் அதன் பயனாம் அதன் ஒளி என்னுடலில் கலந்து அது என் உடலை பொன் ஒளி ஆக…

“ இறை “ – சன்மார்க்க விளக்கம்

“ இறை “ – சன்மார்க்க விளக்கம் அருட்பா – 6 திருமுறை – உற்ற துரைத்தல் துனிநாள் அனைத்தும் தொலைத்துவிட்டேன் தூக்கம் தவிர்த்தேன் சுகம்பலிக்கும்கனிநாள் இதுவே என்றறிந்தேன் கருத்து மலர்ந்தேன களிப்புற்றேன்தனிநா யகனே கனகசபைத் தலைவா ஞான சபாபதியே நான் இறையும் கலக்கமுறேன் இளைக்க மாட்டேன் எனக்கருளே இறை என்ற வார்த்தையில் இருந்து இறைவன் என்ற சொல் உண்டாகிறது இறை எனில் – அணுவைக் காட்டிலும் மிக மிக சிறியது எனப் பொருளாம் இருப்பதிலேயே மிக…

தூக்கம் ஒழிக்கும் வகை சூது

தூக்கம் ஒழிக்கும் வகை சூது   ஆறாம் திருமுறை – தனித்திரு அலங்கல் 5341 தூங்காதே விழித்திருக்கும் சூதறிவித்தெனை ஆண்ட துரையே எனை நீங்காதே என்னுயிரில் கலந்து கொண்ட பதியே கால் நீட்டிப்பின்னே வாங்காதே விரைந்திவண் நீ வரல் வேண்டும் தாழ்ந்திடில் மனந்தான் சற்றும் தாங்காதே இதுநினது தனித்திரு உளமறிந்த சரிதம் தானே இங்கு வள்ளல் பெருமான் தனக்கு தூக்கத்தை தவிர்க்கும் வகை  இறைவன் கற்றுக்கொடுத்ததாக  பாடுகிறார் இது தான் சிற்றம்பலக்கல்வி மருத்துவரும் மற்றோரும் பசி தூக்கம்…

பக்குவம்

பக்குவம் எந்த இடம்   நமக்கு சொந்தம் இலையோ  , அந்த இடத்திலே ஒட்டி இருப்பது பக்குவம் இல்லாததை காட்டுவது ஆம் அதிலிருந்து வெட்டி செல்ல முயற்சி பயிற்சி செய்வது தான் பக்குவம் பருவம் அடைந்த ஒரு பெண் திருமணம் ஆகி பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு வந்துவிடுகிறாளோ ? பக்குவம் ஆன உயிரும் மண்ணிலிருந்து விண்ணுக்கும் ஏகிவிடும் வெங்கடேஷ்   

தெளிவு

தெளிவு மனதில் சமரசம் உண்டாகா வரையிலும் சுவாசத்தில் சமரசம்  உண்டாகா வரையிலும் ஒருமை எனும் சமரசம் உண்டாகா வரையிலும் சோமரசம் பேட்டைக்கு ஏற வழி தெரியாது  உண்டாகாது வெங்கடேஷ்