பட்டினத்தார் பாடல் – உண்மை விளக்கம்
திருவாலங்காடு
வீடு நமக்குத் திருவாலங்காடு விமலர் தந்த
ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம் ஓங்கு செல்வ
நாடு நமக்குண்டு கேட்பதெல்லாம் தர நன்னெஞ்சமே
ஈடு நமக்கு சொலவோ ஒருவரும் இங்கில்லையே
பொருள் :
மேலோட்டமாக பார்த்தால் சாதாரண பொருள் எடுக்க முடியும் – ஊர் – ஓடு என
ஆனால் சித்தர் அப்படி பாடியிருக்க வாய்ப்பிலை
1 வீடு – ஆலங்காடு எனில் சுழுமுனை உச்சி குறிக்க வருகிறார்
ஆலங்காடு எனில் இருளாகிய விஷம் , உச்சித்துவாரம் மூடி இருப்பதால்
அது தான் அவர்க்கு வீடு எங்கிறார்
2 ஓடு – பிச்சை எடுக்கும் பாத்திரம் அல்ல – இது சூக்குமமான பொருள்
3 செல்வ நாடு – விந்து கலை செழித்து ஓங்கும் உச்சி – பிரமரந்திரம்
அது எல்லாம் அளிக்கும் ஆம்
இந்த மேலான நிலைக்கு உயர்ந்த எனக்கு ஈடு யார் ?? என்கிறார்
வெங்கடேஷ்