சிவவாக்கியர் பாடல்
இரண்டுமொன்று மூலமாய் இயங்குசக் கரத்துளே
சுருண்டுமூன்று வளையமாய்ச் சுணங்குபோல் கிடந்ததீ
முரண்டெழுந்த சங்கினோசை மூலநாடி ஊடுபோய்
அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே.
பொருள் :
மூலத்தில் இருக்கும் மூலாக்கினி – நாதத்தினால் – சுழுமுனை நாடி வழியே மேலேறி – அரங்கன் பட்டணம் ஆகிய உச்சிக்குழியில் அமர்ந்த து என தன் ஆன்ம அனுபவம் உரைக்கிறார் சித்தர்
வெங்கடேஷ்