காகபுசுண்டர் பெரு நூல் காவியம் – “ பத்தாம் வாசல் “ பெருமை
அறிவான கண்ணெதென்றால் புருவவாசி
அங்கத்திற் பம்பரம்போல் ஆடினாக்கால்
முறிவான பூட்டுடைத்து புருவமத்தி
மூக்கோடும் வாசியது நெற்றியேறில்
தெறிவான யிவ்வாசல் பத்தாம் வாசல்
சிறுவாசல் அறிவுவாசல் யோகவாசல்
குறியான மணிவாசல் – குருவின் வாசல்
கோபுர வாசல் தெரிவாயானால் பாரே
பொருள் :
சித்தர் ப கரக் குழி – உச்சிக்குழி ஆகிய பத்தாம் வாசல் பத்தி பாடுகிறார்
மூக்கில் ஓடும் சுவாசம் , வாசல் திறந்து , வாசி ஆகி , மேலேறி நெற்றிக்கு வந்தால் அது தான்
1 பத்தாம் வாசல்
2 சிறிய துவாரம் உள்ள வாசல்
3 அறிவாகிய ஆன்ம வாசல்
4 யோகவாசல்
5 விந்து , மணி ஆகி நிற்கும் மணி வாசல்
6 சிரம் எனும் கோபுரத்தில் இருக்கும் வாசல்
என அதன் பெருமை பாடுகிறார்
வெங்கடேஷ்