காக புசுண்டர் பெரு நூல் காவியம்

காக புசுண்டர் பெரு நூல் காவியம் பொய்த்தவசி தானென்ற மனங்கொண்டு ஊர்ச்சோறுண்டு தவசியெனத் தானிருந்து குறடுபூண்டு ஊனென்ற உடல் வளர்த்து சடை நாணிட்டு உத்தமர்போ லேதாடி உவமைபூண்டு தேனென்ற மொழிபேசி காவியிட்டு தெருவெங்கும் பாடிடுவார் திவசச்சோறுக்கு மானென்ற அபிமானங் காசே கொண்டு வாய்மதங்கள் பேசுவார் தன்னைக்காணார் பொருள் : தான் என்பது மனமாக கற்பித்தும் ஊர்ச்சோறுக்கே  கண் வைத்தும்  உடல் வளர்த்து சடை பின்னியும் தாடி வைத்துக்கொண்டு உத்தமர் போல் வேஷமிட்டும் – பாதக்குறடு அணிந்தும் தேனொழுக…

அகத்தியர் – பூரணசூத்திரம்

அகத்தியர் – பூரணசூத்திரம் விண்ணதனை நித்தநித்தம் கண்ணோட்டம் பார் வெள்ளி நிற்கும் சுழினையிலே வாசியேறும் கண்ணதனை முறுக்கியே ஏறப்பாரு கபாலத்தில் அமுதமது கனிந்து பாயும்* புகழ் பெரிய சித்தருட மரபுள்ளோரைக் கூவென்று தர்க்கமிடும் உலகமாண்பர் கூட்டுறவை விட்டுவிடு குன்றிலேறு* பொருள் : கண்ணை  தினமும் சுழிமுனை  பார்த்தபடியே வைத்திரு அது நோக்கி வாசி மேல்  ஏறும் அதனால் அமுதம் ஊறும் சித்தர் பெருமக்களுடன் வாதம் புரியும் உலகத்தவருடன் உறவை துண்டித்து உச்சிக்கு ஏறுவாய் வெங்கடேஷ் 9600786642 

ஆன்ம சாதகன் எப்படி இருக்கணும்??

ஆன்ம சாதகன் எப்படி இருக்கணும்?? “ வரையாடு “  போல் அது , அந்த மிருகம் – மனிதர் கூட ஏற முடியாத – மிக  நெடுக்கான உச்சி – இடத்தை  கூட தன் விடா முயற்சியால் அடைந்து விடும் அது மாதிரி தான் ஆன்ம சாதகனும் இருக்க வேணும் மனவுறுதிக்கு எடுத்துக்காட்டு ஆகும் இந்த விலங்கு   வெங்கடேஷ்