தூக்கமும் தவமும்
தூக்கத்தில்
சிறிது சத்தம் கூட
நம் தூக்கத்தை கலைப்பதிலை
நாம் அசையாமல் தூங்குகிறோம்
உற்சாகம் சக்தி பெறுகிறோம்
தவத்திலும் இதே நடக்க வேண்டும்
ஐம்புலன் ஒடுக்கத்தால்
புற உலக சத்தம் – வாசனையால்
நாம் அசையாமல் சிதறாமல் நின்றால்
அதுக்கு ஆட்படாமல் நின்றால்
அது தூங்காத தூக்கம் ஆம்
ஆம் தவம் தூங்காத தூக்கம் ஆகிடும்
இதிலும் சக்தி உற்சாகம் அடைவோம்
சக்தி சேமிக்கப்படுவதால்
வெங்கடேஷ்