பொறுப்பு
ஒரு நிறுவனம்
1000 கோடி ரூ வர்த்தகம்
100 கோடிக்கு மேல் லாபம்
அதன் தலைவர் , தனக்கு பிறகு , நிர்வகிக்கும் பொறுப்பை , நல்ல திறமையானவரிடம் , படித்த – பண்பு குணமுள்ள மேலாளரிடம் தான் ஒப்படைப்பார்
ஊதாரி , பொறுப்பில்லாதவன் – ஈடுபாடில்லாதவன் என இருக்கும் தன் மகனிடம் அந்த பெரிய பொறுப்பை ஒப்படைக்க மாட்டார்
அதே மாதிரி தான் , இறையும்
படித்த ஒழுக்கம் நிரம்பிய
ஐம்புலன் அடக்கிய ஒருமை உடையோர்க்கே
தவத்தில் அனுபவம் பெற்றவர்க்கே
தன் இயல்பை உண்மை வெளிப்படுத்தும்
ஆற்றல்கள் சித்திகள் அளிக்கும்
தயவு உடையவராக இருக்க வேணும்
தயவு = ஆன்ம அனுபவம்
சோறு போடுதல் அல்ல
சோறு போட்டால் எல்லாம் கிடைத்துவிடும் என்பவர்க்கு இது அவர் நெஞ்சில் தீ வைப்பதுக்கு சமம் , வாயில் மண் அள்ளிப்போடுவது மாதிரி
வெறும் சோறு போடுபவர்க்கு ஐந்தொழில் செயும் வல்லமை கிடைக்குமா ?? யோசிக்கவும்
சும்மா கிடைத்துவிடாது எல்லாம்
வெங்கடேஷ்