இராமதேவர் – ஞானி பெருமை
சிவயோகம் பாடல்
தேறாத சித்தரிடம் பேசவேண்டாம் ஜெபதபங்க ளறியாரைச் சேர்க்கவேண்டாம் கூறாத சொற்களைத்தான் கூவிக்கூவிக் குணமறியான் மனமறியான் குருட்டுமாடு பேராசை தான் பிடித்துப் பேய்பேலோடிப் பேய்க்கூற்றாய்த் திரிவாரை யடுக்கவேண்டாம் ஆறான தில்லறமே சத்தியென்று அமர்ந்திருப்பான் கோடியினி லொருவன்றானே. .
பொருள் :
அவ ஞானியர் தம் குணம் நடத்தை :
பயிற்சி அனுபவத்துக்கு வராத ஞானவான்களிடம் சேர வேணாம்
ஜெபம் தவம் ஆற்றாதாருடன் இணக்கம் வேண்டாம்
ஆசை எனும் பேய் பிடித்து திரிவாருடன் கூட வேணாம்
ஐம்புலன் களும் ஆறும் இடமான தருமம் ஆகிய ஆன்ம நிலையில் – அனுபவத்தில் உற்றோர் – கோடியில் ஒருவன் தானே
உப நிடதமும் இதைத் தான் கூறுது
கோடியில் ஒருவன் தான் வெட்ட வெளியில் விளங்கும் ஆன்மாவைத் தரிசிக்கிறான்
இது மெய்யான ஞானியர் ஒற்றுமை
வெங்கடேஷ்