திருவள்ளுவர் ஞானவெட்டியான் மாலை
தீர்த்தமுமாடிக்கொள்வீர்- தெளிந்தவர்போல்
செபதபசாஸ்திரங்க ளோதிக்கொள்வீர்
யாத்திரைதீர்த்தங்களாடி- நதிகள் தோறும்
அலைந்துஅலைந்துசுற்றி அலைகிறீர்
மாற்றியேபிறப்பமென்று- பொய்ப்பிரட்டு
வாய்சமத்துசாஸ்திரஞ் சொல்மடையர்களே
பாத்திராபாத்திரமறியா- பாவிகள் தான்
பாடுபட்டுங்கூறறியாமாடுகள் தான்
விளக்கம் :
எல்லாம் அறிந்து தெளிந்துளோம் என்ற எண்ணத்தினால் , தீர்த்தம் ஆடியும்
சாத்திரம் கற்று , ஜெபம் தவம் ஆற்றியும் , தேசம் எங்கும் அலைந்து , தேடி புண்ணிய நதிகளில் தீர்த்தம் ஆடி பாவ நாசம் செய்துகொள்வீர்
இதனால் உள்ளுக்குளே – துவிஜன் நிலை அடைவோம் – தனக்குளே மீண்டும் பிறப்போம் என்று பொய் சொல்லித்திரிவீர்
தான் அரை என்ற நிலை மாறி முழுமை அடைதல் தான் மாற்ற்ப்பிறத்தல்
உள்ளுக்குளே மீண்டும் பிறத்தல்
மக்கள் எப்படி எனில் ??
தகுதி உடைய பாத்திரன் யார் ?
தகுதி இல்லா அபாத்திரன் யார் ??
என பாகுபாடு பார்க்கத்தெரியாத பாவிகள்
உழைத்து பலன் கிடைக்கா மாடுகள்
வெங்கடேஷ்