அகத்தியர் ஞானம்

அகத்தியர் ஞானம்

நூல்பாரு கொங்கணவர் கடைக்காண்டத்தின்

நுணக்கமெல்லாமதிற்றோணும் பூசைதீட்சை

பால்சீனிபழந்தேன்கற்கண்டு வைந்துமாகும்

பால்திரட்டுயுண்டருசி போலேகாணும்

மூலகுரு மந்திரமு மமிர்தந்தன்னில்

மூட்டினார்நியாயவகை யெல்லாஞ் சொன்னார்

கால்பாருதலைபாரு புனலைப்பாரு

கண்காது மூக்கி துவாய்க் கண்டவாரே

பொருள்:

கொங்கணவர் கடைக்காண்டம் எனும் நூல் பார்

அதில் கூறப்பட்டிருக்கும் பூசை முறை எல்லா  நுணுக்கம் தெரிவிக்கும்

அது பால் சர்க்கரை தேன் கற்கண்டு கனி என 5 கலந்தது போல் இனிப்பாக இருக்கும்

அவர் மூல மந்திரம் – அமுதம் உற்பத்தி செயும் வகை சொல்லி இருக்கிறார்

சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் பற்றி விளக்கியுள்ளாரே

இவைகள் 5 பூதங்களின் சுத்தமான  நிலை

இவைகள் இல்லாமல் ஞானம் அடைதலும் – முத்தேக சித்தி அடைதலும் இல்லை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s