“ கடை “ – சன்மார்க்க விளக்கம்
“ ஆடுதுறை – சுழிமுனை உச்சி பெருமை “
அகத்தியர் துறையறி விளக்கம்
கற்புடைய மனத்தோர்கள் கால்ரெண்டைத்தான்
“ கடைக்கோடி “ நடுத்தெருவே கட்டும்போது
உற்பனமும் அறிவார்கள் உண்மை காண்பார்
ஓரெழுத்து மீரெழுத்து முண்மை காண்பார்
“எப்படியும் கடைக்கோடி முனையில் நிற்பார்”
இறவார்கள் பிறவார்கள் எமனை வெல்வார்
சொற்பொருளாம் திருவாடு துறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே
விளக்கம் :
மனதை உலக நோக்காக இல்லாமல் ஆன்ம நோக்கமாக வைத்திருப்பவர் கற்புடையோர் – ஆண் ஆனாலும் பெண் ஆனாலும் சரி
அவர் சுவாசம் இரண்டையும் “ சுழிமுனை உச்சியில் “ வைத்து கட்டியிருப்பர்
அதனால் கடை = சுழிமுனை உச்சி ஆகும்
இதை தான்
1 கடைத்தேற வேண்டும் எனில் – தவத்தால் , சுழிமுனை உச்சிக்கு ஏற வேண்டும் என்ற அடிப்படையிலும்
2 கடை விரித்தேன் என வள்ளல் பெருமான் கூறினார் என்றால் , உச்சி ரகசியங்களை விரித்துரைத்தேன் ஆனால் உலகம் மக்கள் அதை புரிந்து கொள்வதாயிலை
அவர் கவனம் வேறு
பணம் பதவி
3 தனுஷ்கோடி – நம் தென் இந்தியாவின் முனை ஆகிய அழிந்து போன ஊர்
ஊழியால் அழிந்த ஊர்
தனுஷ் = இடை நாடி ஆகிய சுழிமுனை நாடி
கோடி – முனை
அதனால் கடைகோடி = சுழுமுனை நாடி குறிப்பதாகும்
வெங்கடேஷ்