அகத்தியர் ஞானம் அட்டசித்தாமெட்டெட்டுஞ் சித்தியாகுஞ் மடிமுடியாமிரண்டுக்கும் வழிதானீது விட்டெழுத்துதொட்டெழுத்தும்விடாதெழுத்தும் வேதாந்தசற்குரவை வணங்கிக்கேளு சட்டமிட்டவாதார மிம்மட்டமாச்சு சண்முகமாமாதாரக் கருவைக்கேளு திட்டமுடன் மனவுறுதி சின்மயத்தை வெல்லுந் திருச்சிற்றம்பலம்போற்ற ஞானமுற்றே பொருள் கருமசித்திகள் அஷ்டமா சித்திகளும் , யோக சித்தியாம் 64 சித்திகளும் கைவரப் பெறும் திருவடி காண , சுழிமுனை உச்சி கண்ணால் காண , அடியும் முடியும் ஆன இறைவனை காணும் வழி இது ஞானம் என்பது என்ன வேதாந்த நிலையில் இருக்கும் குருவை வணங்கி கேட்டுக்கொள்வாயாக வேதாந்தம்…